• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவேற்காடு திமுக பெண் கவுன்சிலர் சாலையில் இறங்கி வாயை பொத்தி போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு.

திருவேற்காடு திமுக பெண் கவுன்சிலர் சாலையில் இறங்கி வாயை பொத்தி போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு.

S.முருகன்

UPDATED: Sep 4, 2024, 7:20:20 PM

Latest Political News In Tamil 

திருவேற்காடு நகராட்சியில் மொத்தமாக 18 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த ஒரு சில நாட்களாக வீடுகளில் இருந்து கொட்டப்படும் குப்பைகளை முறையாக அகற்றப்படவில்லை என கூறப்படுகிறது 

இதனால் சாலையில் குப்பைகள் தேக்கம் அடைந்து துர்நாற்றம் வீசி நோய்தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் 12 வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் ராணி சுடலைமணி திருவேற்காடு நகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

Breaking News In Tamil 

இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் ராணி சுடலைமணியுடன் சாலையில் தேங்கி நிற்கும் குப்பைகளிடையே நின்று வாயை பொத்தி ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது 

இது குறித்து புகார் தெரிவித்த கவுன்சிலர் ராணி திருவேற்காடு நகராட்சியில் பெண் கவுன்சிலருக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை எந்த ஒரு புகார் தெரிவித்தாலும் அதனை சீர் செய்து தரப்படவில்லை

Latest Chennai District News 

நகராட்சித் தலைவர் எந்த ஊரையும் பணியும் செய்யவில்லை என குற்றம் சாட்டிய அவர் உடனடியாக குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

Dmk

VIDEOS

Recommended