• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவாரூர் திமுக மாவட்ட செயல்வீரர் கூட்டத்தில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ்க்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்.

திருவாரூர் திமுக மாவட்ட செயல்வீரர் கூட்டத்தில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ்க்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்.

ஜெயராமன்

UPDATED: Jun 12, 2024, 9:01:50 AM

திருவாரூரில் திருவாரூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் தன்ராஜ் தலைமையில் நடைபெற்றது இதில் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டச்செயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ கலந்துகொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினார்

இதில் தீர்மானங்களாக - கோவையில் திமுக முப்பெரும் விழாவிற்கு திருவாரூர் மாவட்டம் திமுக சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் ,40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியை வெற்றிபெற செய்த தமிழ்நாடு முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

மக்களுக்கு இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவிப்பது எனவும் மறைந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ்க்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

இக்கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் கார்த்தி , சாந்தி. மற்றும் ஒன்றிய ,நகர ,பேரூர் கழக செயலாளர்கள் , சார்பு அணி அமைப்பாளர்கள் என கலந்து கொண்டனர்,

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர செயலாளர் வாரை.பிரகாஷ் நன்றி தெரிவித்தார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended