இலவச வீட்டு மனை பட்டா வழங்க திருவள்ளூர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

சுரேஷ் பாபு

UPDATED: Sep 16, 2024, 1:45:12 PM

திருவள்ளூர் மாவட்டம் 

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிஞ்சிவாக்கம் ஊராட்சியில கிராம நத்தம் புலமென் 217 /1 பகுதியில் அமைந்துள்ள கிராம நத்தம் பகுதியை 25 ஆண்டுகளாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றன

செஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடக் குடும்பத்தினர் இவர்களுக்கு குடிநீர் மின்சாரம் மற்றும் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது

இலவச வீட்டு மனை பட்டா

இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வரும் இவர்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும் 27 குடும்பங்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க முயற்சி எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு நீல வானத்து நிலவன் அவர்கள் மனு கொடுத்தார்.

 

VIDEOS

Recommended