சிதம்பரம் பகுதியில் உயரக இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட திருடன்கள்.

சண்முகம்

UPDATED: Aug 23, 2024, 1:21:07 PM

கடலூர் மாவட்டம் சிதம்பரம்

பரங்கிப்பேட்டை, பகுதியில் உயர்ரக இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் வாகனங்கள் திருடப்படும் குடியிருப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த குற்றப்பிரிவு போலீஸ் உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில்

சண்டேஸ்வரநல்லூர் பகுதியை சேர்ந்த குண்டு காட்டாறு, (எ) மணிகண்டன், 22 என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தை கூட்டாளியுடன் சேர்ந்து திருடி செல்லும் காட்சிகள் தெரியவந்தது,

Latest Crime News

இதனை அடுத்து குற்ற பிரிவு போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபடுவதை ஒப்புக்கொண்டார், 

இதனை அடுத்து அவரை கைது செய்த குற்ற பிரிவு போலீசார் அவரிடம் இருந்து இரண்டு யமஹா இருசக்கர வாகனம் R15 உட்பட 3 உயர் ரக இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்,

Latest Cuddalore District News

அதனைத் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட மணிகண்டனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் மேலும் தலைமறைவாக உள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர், 

அவர்களிடமிருந்து 5 லட்சம் மதிப்புள்ள 3 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended