• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • உத்தமபாளையம் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாய் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வீணாகி  வழிந்தோடும் அவல நிலை.

உத்தமபாளையம் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாய் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வீணாகி  வழிந்தோடும் அவல நிலை.

ராஜா

UPDATED: Aug 6, 2024, 8:26:52 AM

தேனி மாவட்டம்

கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் பகுதியில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்ட மையம் உள்ளது.

அங்கிருந்து ராட்சச குழாய்களின் மூலம் கோம்பை, தேவாரம் புதுப்பட்டி மற்றும் அனுமந்தன்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்று நாள்தோறும் அந்தந்த பேரூராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களுக்கு குடிநீரினை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Water 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உத்தமபாளையத்தில் இருந்து தேவாரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கம்பம் நகரில் இருந்து கோம்பை செல்லும் விவசாய தோட்ட சாலையின் வழியாக செல்லும் ராட்சச குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலைகளில் வீணாக வழிந்து ஓடுகின்றது.

இது சம்பந்தமாக துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதால் குடிநீர் வீணாகி செல்வது அப்பகுதி மக்களிடம் மிகுந்த மனவேதனை அளித்து வருகின்றது. 

Theni News & Live Updates

மேலும் பல்வேறு பேரூராட்சி ஊராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கும் குடிநீரின் அளவு குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended