குன்றத்தூர் அருகே பணியின் போது கொதி நிலையில் இருந்த கெமிக்கலில் தவறி விழுந்து வாலிபர் பலி

S.முருகன்

UPDATED: Apr 27, 2024, 9:57:56 AM

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவை சேர்ந்தவர் பிரவீன் குமார்(20), குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிட்கோவில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் 55 டிகிரி கொதிநிலையில் இருந்த சோடியம் ஹைட்ராக்சைடு கெமிக்கல் நிரப்பப்பட்ட தொட்டியில் உள்ள நீரில் சுற்றி கொண்டிருந்த மெஷின் பழுதானதாகவும் அதனை தொட்டியின் மேலே ஏறி சரி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கொதி நிலையில் இருந்த சோடியம் ஹைட்ராக்சைடு தொட்டியில் பிரவீன் குமார் தவறி விழுந்த நிலையில்

அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்து போனார். 

இந்த சம்பவம் குறித்து குன்றத்துத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இறந்து போன பிரவீன் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொதி நிலையில் இருந்த தொட்டியின் மீது ஏறி பணி செய்யும் போது தவறி விழுந்து ஊழியர் ஒருவர் இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended