• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் பெண்ணை பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓட்டம்.

ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் பெண்ணை பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓட்டம்.

செ.சீனிவாசன்

UPDATED: Aug 2, 2024, 11:42:41 AM

நாகப்பட்டினம் மாவட்டம்

வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் தெற்கு வீதி வசித்து வந்த ராஜாவின் மனைவி ஈஸ்வரி வயது 39 இரவு அவர் வீட்டு அருகே உள்ள பெட்டி கடைக்கு செல்லும் போது கடையின் வாசலில் அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பித்து சென்றுள்ளனர். 

Nagapattinam News & Live Updates 

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஈஸ்வரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

Crime News

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். 

வீட்டின் அருகே கடைக்கு வந்த பெண்ணை இரண்டு மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended