மானாமதுரையில் அடிக்கடி மின்தடையால் பொதுமக்கள் அவதி.

கார்மேகம்

UPDATED: Oct 2, 2024, 10:31:03 AM

ராமநாதபுரம் மாவட்டம்

மானாமதுரை பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஏற்படும் மின் தடையால் மின்சாதன பொருட்கள்  பழுதாவதுடன் அவற்றை உபயோகிக்க  முடியாத நிலை ஏற்படுவதாக தெரிவித்தனர்

அவ்வப்போது ஏற்படும் குறைந்த மின்னழுத்த பிரச்சினையால் தொழிலாளர்கள் இல்லத்தரசிகள் அவதியடைகின்றனர்

Latest Ramanathapuram District News In Tamil 

மேலும் இது தொடர்பாக பல முறை புகார் தெரிவித்தும் மின்சாரவாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்

பள்ளி வேலை நாட்களில் காலை நேரங்களில் மின்சாரம் தடைபடுகிறது இதனால் அத்தியாவசிய வேலைகள் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது இதற்கு முழுமையாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

VIDEOS

Recommended