• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கம்பத்தில் 18 க்கும் மேற்பட்டவர்களை வெறி நாய் கடித்ததால் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சம்

கம்பத்தில் 18 க்கும் மேற்பட்டவர்களை வெறி நாய் கடித்ததால் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சம்

இரா.இராஜா

UPDATED: Oct 7, 2024, 3:36:26 PM

தேனி மாவட்டம் 

கம்பம் பகுதி முக்கிய வீதிகளான பாரதியார் நகர், சின்ன வாய்க்கால் பகுதி, வேலப்பர் கோவில் தெரு, பகுத்தியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 18 க்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறியது

இதில் பிச்சைமணி என்ற 52 வயது பெண்ணை கால் பகுதியில் கடித்து குதறியதால் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார் மற்ற நபர்கள், லேசான ரத்த காயம் இருந்ததால் ஊசி மருந்து கொடுத்து அனுப்பி வைத்தனர்.

மக்கள் கூறுகையில் கம்பம் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதை நகராட்சி நிர்வாகமும் தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். 

நகரின் முக்கிய வீதிகளில் பொதுமக்களை வெறி நாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

 

VIDEOS

Recommended