பருவ மழைக்கு முன் ஊருணியை தூர்வார அப்பகுதி மக்கள் கோரிக்கை

சண்முகம்

UPDATED: Aug 19, 2024, 5:11:39 PM

இராமநாதபுரம்

இராமநாதபுரம் அருகே உள்ள சேதுக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பாத்தி ஊருணி பல வருடங்கள் தூர்வாரப் படாததால் ஊருணியை சுற்றி கருவேல மரங்கள்  வளர்ந்து ஊருணி தெரியாத வகையில் ஆக்கிறமித்துள்ளன ஊருணியும் மணல் மேவி மேடாக காட்சி அளிக்கிறது 

இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து  ஊராட்சிகளிலும் ஊரணி தூர்வாரப்பட்டு  வருகின்றன

இந்த நிலையில் சேதுக்கரை ஊராட்சியை சேர்ந்த பாப்பாத்தி ஊருணி தூர் வரப்படவில்லை பல வருடம் தூர்வாப்படமல் மண் மேடான பாப்பாத்தி ஊருணியை தூர்வார அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Latest Ramanathapuram District News

இது குறித்து பஞ்சந்தாங்கி முருகாண்டி தெரிவிக்கையில் இந்த பாப்பாத்தி ஊருணி பல வருடங்களாக தூர்வாராமல் மணல் மேடாகிவிட்டன

இந்த ஊருணி அருகே உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி ஊருணியை தூர் வாரி மழை நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

VIDEOS

Recommended