தண்டவாளத்தில் முடிஞ்ச தலைவிதி... தற்கொலையா..? விபத்தா..?

அஜித் குமார்

UPDATED: Jun 30, 2024, 3:02:19 AM

ஆரணி அருகே விழுப்புரம் - காட்பாடி செல்லும் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் உடலில் காயங்களுடன் தலை நசுங்கி சடலமாக மீட்கப்பட்ட சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட் பாடி ரயில்வே போலீசார் சடலத்தை கைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி அடுத்த நடுக்குப்பம் ஊராட்சி க்குட்பட்ட பார்வதி அகரம் என்ற கிராம பகுதியில் ரயில்வே பாதை செல்கின்றது. இந்தப் பாதையில் ராமேஸ்வரம் விழுப்புரம் போன்ற மாவட்டத்தில் இருந்து காட் பாடி வழியாக திருப்பதி உள்ளிட்ட இடங் களுக்கு பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் செல்கின்றன.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை 7.30 மணி அளவில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வரை செல்லக்கூடிய பாசஞ்சர் ரயில், பார்வதி அகரம் என்ற  கிராம பகுதி அருகே வந்தபோது, அடை - யாளம் தெரியாத நபர் ரயிலில் சிக்கி உடல் நசுக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் தகவல் அறிந்து வந்த காட்பாடி - ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி - பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உடலின் அருகே செருப்பு ஒன்று கழட்டி விடப்பட்ட நிலையில் இருந்ததால், அவர் ரயிலில் பாய்ந்து தற் கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின் றனர்.

ஆரணி அருகே அடையாளம் தெரியாத நபர் ரயில் தண்டவாளத்தில் உடல் நசுக்கி பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended