சிலிண்டர் வெடித்து ஓட்டு வீடு தீப்பற்றி எரிந்து நாசம்.

மைக்கேல்

UPDATED: Jun 26, 2024, 5:43:26 AM

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 42) இவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி பானுமதி (வயது 37) இவர்களது மகன்கள் சர்வேஸ் (11) ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இன்னொரு மகன் பாவேஸ் (9) நான்காம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் பானுமதி தனது மகன்களை அழைத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்து புகை வரவே அக்கம் பக்கத்தினர் பானுமதிக்கு தகவல் கூறி வர சொல்லி உள்ளனர்.

பானுமதி வீட்டின் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென வீட்டிற்குள் இருந்த சமையல் சிலிண்டர் வெடித்து வீடு முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. தகவல் அறிந்து வந்த வேப்பூர் தீயணைப்புத்துறையினர் நிலைய அலுவலர் (பொ) கரிகாலன் தலைமையில் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீட்டிற்குள் இருந்த பீரோ, கிரைண்டர் ,கட்டில் உட்பட ஏழு பவுன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து விட்டதாகவும் சேதமான பொருட்களின் மதிப்பு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் இருக்கும் என கருதப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து அங்கு வந்த பரவாய் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி பானுமதி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் கொடுத்து உதவி அளித்தார்.

 

VIDEOS

Recommended