ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆந்திர மாநில சிறுவன் மாயம் தீவிரமாக தேடியும் கண்டுபிடிக்க முடியாத வேதனை.

சண்முகம்

UPDATED: Aug 21, 2024, 7:03:21 AM

கடலூர் மாவட்டம்

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் அடுத்துள்ள குட்டிகா கிராமத்தைச் சேர்ந்த அஞ்சாயா என்பவரின் மகன் ஒன்பது வயது சீனு. வாத்துகள் மேய்க்கும் தாய் தந்தையுடன் தமிழகத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் அப்பகுதியில் தற்காலிக குடில் அமைத்து வாத்துகளை மேய்த்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்காக தந்தையுடன் ஸ்ரீமுஷ்ணம் அரசு மருத்துவமனைக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்ற போது சிறுவன் சீனு திடீரென மாயமாகிப் போனார்.

Latest Cuddalore District News

பல இடங்களிலும் தேடிப் பார்த்த அவரது குடும்பத்தினர் சிறுவன் சீனு எங்கு தேடியும் கிடைக்காததால் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகார் குறித்து போலீசார் தீவிரமாக தேடி வந்தும் எங்கு தேடியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சீனுவின் தாய் தந்தையர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

வெளிமாநில சிறுவன் தமிழகத்தில் காணாமல் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

VIDEOS

Recommended