2வது மனைவி மற்றும் முதல் மனைவியின் சகோதரன் சேர்ந்து மாரிமுத்து என்பவரை வெட்டி கொலை

ரமேஷ்

UPDATED: Jul 12, 2024, 5:27:31 AM

Tamil Nadu Crime News 

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை அடுத்த 69.சாத்தனூர் பட்டம் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த துரை என்பவரின் மகன் மாரிமுத்து (29) இவரின் முதல் மனைவி அஞ்சலையுடன் வாழ்ந்து வந்த நிலையில் 

கடந்த மூன்று ஆண்டுக்கு முன்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு முதல் மனைவி பிரிந்துச் சென்ற நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்னர் திருச்சியை சேர்ந்த பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

Latest Kumbakonam District News

முதல் மனைவியின் சகோதரன் மணிகண்டன் 2 வது மனைவி பிரியா உள்ளிட்டோருடன் மாரிமுத்து அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்திவந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த 5 நாட்களாக தனது மகன் மாரிமுத்து காணவில்லை மேலும் முதல் மனைவியின் சகோதரனான மணிகண்டன் மீது சந்தேகம் இருப்பதாக மாரிமுத்துவின் தந்தை துரை, புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து திருநீலக்குடி காவல்துறையினர் மணிகண்டன் வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.

குற்றம் நியூஸ் அப்டேட்ஸ்

விசாரணையில் மணிகண்டன் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 3 பேரும் சேர்ந்து மது அருந்தியதாகவும் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பிரியா மாரிமுத்துவை வெட்டி கொன்றதாகவும் மாரிமுத்துவை ஆடுதுறை தரங்கம்பாடி சாலையின் அருகே இருந்த தோப்பில் ப்ரியோவோடு சேர்ந்து புதைத்ததாகவும் மணிகண்டன், ஒப்புக்கொண்டார். 

இதன் அடிப்படையில் திருவிடைமருதூர் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக், மற்றும் திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்யராஜ், தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புதைக்கப்பட்டிருந்த மாரிமுத்துவின் உடலை மீட்டு அங்கேயே பிரேத பரிசோதனை நடந்தது. 

News

முதல் மனைவியின் சகோதரனும் இரண்டாவது மனைவியும் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு மாரிமுத்துவை வெட்டி படுக்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணங்களா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

VIDEOS

Recommended