• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • டெட்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி கண்டன போராட்டம்

டெட்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி கண்டன போராட்டம்

JK

UPDATED: Aug 5, 2024, 12:22:29 PM

திருச்சி 

2013 ஆண்டு ஆசிரியர் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற நலச் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநில தலைவர் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுமார் 500கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

TET தேர்வு

Trichy News Live Today

நிர்வாகிகள் வடிவேல்சுந்தர், சண்முகம், பிரியா, ஹரிஹரசுதன், ஸ்ரீதர் உட்பட 500கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் நியமங்களில் 2013ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று11 ஆண்டுகள் கடந்தும் 40 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இதுவரை பணி வழங்கவில்லை அவர்களுடைய பணி வழங்க வேண்டும்,

அரசாணை 149 முற்றிலும் நீக்கிட வேண்டும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 177 அரசாணை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன போராட்டம் நடைபெற்றது.

 

  • 1

VIDEOS

Recommended