• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திமுக அரசை கண்டித்தும், திருநெல்வேலி ஆட்சியர் கார்த்திகேயனுக்கு எதிராகவும் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

திமுக அரசை கண்டித்தும், திருநெல்வேலி ஆட்சியர் கார்த்திகேயனுக்கு எதிராகவும் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

லட்சுமி காந்த்

UPDATED: Oct 25, 2024, 8:00:53 PM

காஞ்சிபுரம் மாவட்டம்

ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு, தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதை கண்டித்தும் , திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு எதிராகவும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நவீன் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், காலி பணியிடங்களை நிரப்புதல், பழைய பென்ஷன் வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்தும், 

Kancheepuram District News In Tamil 

நடைபெறும் ஆய்வு கூட்டங்களில் அரசு அலுவலர்களை தரக்குறைவாகவும் , பெண் அலுவலர்களை ஒருமையிலும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பேசுவதை கண்டித்தும், வருவாய் துறை அலுவலர்கள் மீது பாரபட்சமான பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுப்படுவதை கண்டித்தும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மேற்கண்ட கோரிக்கை மற்றும் புகார் மீது தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் . காலதாமதப்படுத்தினால் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து செல்வார்கள். அந்த நிலைக்கு வருவாய் அலுவலர் சங்கத்தினரை தள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். 

பேட்டி - நவீன் குமார் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம்

 

VIDEOS

Recommended