ஆற்காட்டில் பரபரப்பு அதிமுக நகர மன்ற உறுப்பினர் திடீர் கைது.

பரணி

UPDATED: Jul 17, 2024, 7:09:19 PM

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு 28 வது வார்டு நகர மன்ற உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த உதயகுமார் இருந்து வருகிறார்.அவர் மீது பல்வேறு புகார்கள் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நகர மன்ற கூட்டம் நடைபெற்ற போது அனுமதி இன்றி அவையில் ஒழுங்கு இனமாக நடந்து கொண்டதாக கூறி கடந்தாண்டு ஜூன் மாதம் அவர் உறுப்பினர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். 

அதனைத்தொடர்ந்து பல மாதங்களுக்குப்பிறகு உதயகுமார் திடீரென நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் உள்ளே தீக்குளிக்க முயற்சித்தாக கூறப்படுகிறது.

அது தொடர்பாக நகராட்சி ஆணையர் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

District News & Updates in Tamil -

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, நிலுவையில் உள்ள , மேலும் 29 வார்டு பகுதியை சேர்ந்த மணி அவரது மனைவி சுகந்தி என்பவர்களை நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் 09.04.2024 அன்று பிரச்சாரத்தின் போது அந்த பகுதி 28 வது அதிமுக கவுன்சிலர் உதயகுமார் என்பவர் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது அப்பகுதி வாசியான சுகந்தி ,மணி ஆகியவர்கள் உதயகுமாரிடம் எங்கள் பகுதியில் குப்பை மற்றும் கழிவுநீர் கால்வாய் சீர் செய்யக்கோரி கவுன்சிலரான உதயகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Latest District News in Tamil 

இதில் ஆத்திரம் அடைந்த அதிமுக கவுன்சிலர் உதயகுமார் அந்த தம்பதியினரை தாக்கியதாக நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த மூன்று மாதம் பிறகு போலீசார் வீட்டில் இருந்து உதயகுமாரை கைது செய்து 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended