போதை பழக்கத்திற்கு எதிரான சென்னை வரை செல்லும் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி.

JK

UPDATED: May 31, 2024, 11:32:29 AM

திருச்சி ரோட்டரி சங்கம் மற்றும் ஹேக்கர்ஸ் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த போதை பழக்கத்திற்கு எதிரான ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்து பேசுகையில் போதை பழக்கத்திற்கு எதிரான இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்கள் கவனமுடனும், பாதுகாப்பாகவும் திருச்சியில் இருந்து சென்னை சென்று இந்த விழிப்புணர்வு பேரணியை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியானது திருச்சியில் துவங்கி சென்னையில் நிறைவடைகிறது. மேலும் இந்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியில் மூன்றரை வயது முதல் 28வயது வரை உள்ள 70ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த 3நாள் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், செங்கல்பட்டு, அம்பத்தூர் வழியாக சென்று சென்னையில் நிறைவடைகிறது.

 

VIDEOS

Recommended