• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகை அருகே கீழ்வேளூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து சாலை மறியல்.

நாகை அருகே கீழ்வேளூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து சாலை மறியல்.

செ.சீனிவாசன்

UPDATED: Jul 6, 2024, 1:32:55 PM

பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் படுகொலை

பகுஜன் சமாஜ் கட்சி தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு அவரது வீட்டில் வெட்டி படுகொலை செய்தனர் இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படுகொலையை கண்டித்து நாகை மாவட்டம் கீழ்வேளூரில் பகுஜன் சமாஜ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் கீழ்வேளூர் கடைத்தெருவில் திடிர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

Nagapattinam News & Live Updates 

உண்மை குற்றவாளிகளை கைது செய்யகோரியும், தலித் தலைவர்களுக்கு பாதகாப்பு வழங்க கோரி முழக்கங்களை எழுப்பினர். சாலை மறியலிகளில் ஈடுப்பட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தியதால் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Nagapattinam News

இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் நாகை , திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

VIDEOS

Recommended