• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நியாய விலை கடைகளில் வழங்கப்பட வேண்டிய அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் திமுக ஆட்சியில் ஆந்திரா, கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.

நியாய விலை கடைகளில் வழங்கப்பட வேண்டிய அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் திமுக ஆட்சியில் ஆந்திரா, கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.

அந்தோணி ராஜ்

UPDATED: Oct 13, 2024, 2:56:22 PM

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையத்தில் அதிமுக மேற்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தென்காசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் மற்றும் செட்டியார் பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் 300 பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, புதியதாக கட்சியில் இணைந்தவர்களுக்கும், அட்டை இல்லாமல் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

கே.டி. ராஜேந்திர பாலாஜி

பின்னர் அவர் பேசும் போது, தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது. மக்களை ஏமாற்றுவதற்காக திமுகவில் சதி திட்டம் நடக்கிறது. மக்களை ஏமாற்றி மீண்டும் வாக்குகளை பெறுவதற்காக திமுக வில்லங்கத்தனமான வேலைகளை செய்கிறார்கள்.

குழப்பத்தை உருவாக்கி மக்கள் மனதை திருப்பி விட்டு ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்வார்கள். நான்கு வருடங்களாக திமுக ஆட்சி செய்தும் அவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன நீட் தேர்வு ரத்து, மது ஒழிப்பு, விலைவாசி கட்டுப்படுத்துதல், உணவுப் பொருட்கள் நியாயவிலை கடையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்படும், மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கீடு என்ற எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.


Latest Virudhunagar News In Tamil

மின் கட்டணம் அதிக அளவு உயர்த்தப்பட்டுள்ளது அரிசி பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மண்ணெண்ணெய் நியாய விலை கடையில் கிடைப்பதில்லை.

நியாய விலை கடையில் உணவுப்பொருட்கள் சரிவர கிடைக்காமல் பல்வேறு தரப்பினரும் தெருவில் நிற்கிறார்கள். தமிழக மக்களுக்கு நியாய விலை கடைகளில் வழங்கப்பட வேண்டிய அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை ஆந்திரா, கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.

திமுக

இவ்வாறு மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். திமுக ஆட்சி சர்வாதிகார ஆட்சி. முடி சூடா மன்னர் ஆட்சி திமுக ஆட்சி. பரம்பரை ஆட்சி திமுக ஆட்சி. மக்களாட்சி வேண்டுமென்றால் அதிமுக தான் நாட்டை ஆள வேண்டும்.

பாமர மக்களின் வாழ்க்கை உயர்வுக்காக தொடங்கப்பட்டது அதிமுக. அதிமுக தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். தாலிக்கு தங்கமும், திருமண உதவி தொகையும், 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் மூலம் சாதாரண வீட்டுப் பிள்ளையும் அரசு செலவில் மருத்துவராக படிப்பதற்கு வழிவகை செய்தது அதிமுக.

அதிமுக

அதிமுக ஆட்சி அமைவதற்கு அதிமுகவின் கொள்கைகளை மக்களிடம் பரப்புவதோடு திமுகவின் தீமைகளையும் எடுத்துச் சொல்ல வேண்டும். திமுக ஆட்சி விளம்பர ஆட்சி. விளம்பரத்தால் உயர்ந்த வாழ்க்கை நிரந்தரமாகாது.

பத்து ரூபாய்க்கு திட்டங்கள் தீட்டிவிட்டு அதற்காக 200 விளம்பரத்திற்காக செலவு செய்கிறது திமுக ஆட்சி. ஆயிரம் ரூபாய்க்கு திட்டங்களை தீட்டு விட்டு ஐந்து பைசா செலவில் கூட விளம்பரம் செய்யாதது அதிமுக ஆட்சி. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுகவை வரும் சட்டமன்ற தேர்தலில் ஓட ஓட விரட்ட வேண்டும் என்றார்.

 

VIDEOS

Recommended