• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சேத்தியாத்தோப்பு அருகே இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் அழுகிய நிலையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு 

சேத்தியாத்தோப்பு அருகே இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் அழுகிய நிலையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு 

சண்முகம்

UPDATED: Jun 23, 2024, 5:49:43 AM

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சாக்காங்குடி கிராமத்தில்  சின்னதுரை மகன் பிரகாசம் (40), வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சில நாட்களாக இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுப் பிரிந்து, உள்ளூரில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் அடிக்கடி போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்த பிரகாசம் மது போதையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் உள்ளே தூக்கு மாட்டி இறந்துள்ளார்.

இதை யாரும் கவனிக்காத நிலையில் இன்று துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் அழுகிய நிலையில் அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோல் மதுராந்தகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா மகள் இளையராணி(16). இவர் உத்திரமேரூர் அருகே உள்ள குப்பை நல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு, விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறார்.

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு விடுதியின் வார்டன் மாணவி விடுதிக்கு திரும்பாததைக் கண்டு பெற்றோருக்கு தகவல் அளித்த நிலையில் மாணவியின் தந்தை உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே மாணவியின் சொந்த ஊரான மதுராந்தகநல்லூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது மாணவி அழுகிய நிலையில் பிணமாக தொங்கியதைக் கண்டு அதிர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

மாணவியின் குடும்பத்தினர் சொந்த ஊர் மதுராந்தகநல்லூர் கிராமம் என்றாலும் தற்போது அவர்கள் சிதம்பரத்தில் தங்கி இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இரண்டு சம்பவங்களும் தனித்தனியாக ஒரே மாதிரியாக நடைபெற்று இருப்பதால் அப்பகுதியில் அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தி வரகிறது.

 

VIDEOS

Recommended