திருவள்ளூர் அடுத்த புட்லூர் கிராம நியாயவிலை கடை மோசமான நிலை.

ராஜ் குமார்

UPDATED: Jun 30, 2024, 5:41:24 PM

திருவள்ளூர் அடுத்த புட்லூர் கிராமத்தில் நியாயவிலை கடை மிகவும் மோசமான நிலையில் உள்ளது

இதில் சுற்றி உள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த கடையில் தான் அரசு வழங்கும் இலவச அரிசி, கோதுமை, சக்கரை, மண்ணெண்ணெய் போன்றவற்றை வாங்க வேண்டிய நிலை உள்ளது.

மேலும் முதியோர் கர்ப்பிணி பெண்கள் இந்தக் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு இந்த படியில் நடக்கும் போது கீழே செல்லும் போது தடுமாறி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது

மற்றும் வாரத்தில் இரு முறை இயங்கும் இந்த நியாய விலை கடையில் சரியான பொருட்கள் கிடைப்பதில்லை என்று அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் பொறுத்திருந்து பார்ப்போம் இவர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேறுமா என்று.

 

VIDEOS

Recommended