கடல் சீற்றத்தின் காரணமாக பழவேற்காடு-காட்டுப்பள்ளி கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. 

L.குமார்

UPDATED: May 30, 2024, 7:46:15 PM

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே கருங்காலியில் கடல் சீற்றத்தின் காரணமாக பழவேற்காடு-காட்டுப்பள்ளி கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்கள் மற்றும் தென்மேற்கு பருவ மழை காலங்களில் ஏற்படும் கடல் சீற்றத்தின் காரணமாக பழவேற்காடு-காட்டுப்பள்ளி இடையே உள்ள கருங்காலி கடற்கரை சாலையானது துண்டிக்கப்பட்டு வருகிறது.

இப்பொகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு முகத்துவாரம் இருந்த பகுதி என்பதால் ஆண்டுதோறும் இந்த இடத்தில் கடல் சீற்றம் காரணமாக பழவேற்காடு ஏரியும் கடலும் இணையும் விதத்தில் கடலில் இருந்து ஆள் உயர அலைகள் எழும்பி ஆற்றுப்பகுதிக்குள் வருகிறது.

இதனால் இப்பகுதியில் போடப்பட்ட சாலை கடல் நீரால் சூழ்ந்து இப்பகுதி வழியாக எண்ணூர் காமராஜர் துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையங்கள், எல்என்டி மற்றும் அதானி துறைமுகங்களுக்கு செல்பவர்களும் பழவேற்காட்டில் இருந்து சென்னைக்கு செல்பவர்களும் இவ் வழியாக செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இப்பகுதியில் சாலைகளை இணைக்கும் விதத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்

ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தற்போது ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தின் காரணமாக இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் காட்டுப்பள்ளி பகுதியில் இருந்து அத்திப்பட்டு, மீஞ்சூர், காட்டூர், வஞ்சிவாக்கம்,திருப்பாலைவனம் வழியாக பழவேற்காட்டிற்கு சுமார் 40 கிலோமீட்டர் சுற்றி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended