லப்பபேட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு.

பரணி

UPDATED: Aug 18, 2024, 8:25:33 AM

இராணிப்பேட்டை மாவட்டம்

ஆற்காடு அடுத்த லப்பபேட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 100 நாட்கள் வேலையை தொடர்ச்சியாக வேலை வழங்கதாதை கண்டித்தும் லப்பபேட்டை கிராமத்தில் சுமார் 250 க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. 

இதற்கு உண்டான பொருட்கள் வாங்க அருகில் உள்ள மாங்காடு கிராமத்திற்கு செல்ல வேண்டிய உள்ளதாகவும் சிரமத்தை தவிர்க்க இலப்பப்பேட்டை பகுதியில் புதிய ரேஷன் கடை அல்லது பகுதி நேர ரேஷன் கடை அமைத்துதர வேண்டிசுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் லப்பப்பேட்டை இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் தீடிர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல் ஈஸ்வரப்பன் மற்றும் ஆற்காடு தாலுகா போலீசார் ,வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சி வார்த்தை நடத்தினார்.

இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

100 நாட்கள் வேலை | ரேஷன் கடை | சாலை மறியல்

VIDEOS

Recommended