• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • வீட்டின் அருகே உள்ள டாஸ்மாக் உடனடியாக அகற்ற வேண்டி ஆட்சியரிடம் பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் கோரிக்கை மனு

வீட்டின் அருகே உள்ள டாஸ்மாக் உடனடியாக அகற்ற வேண்டி ஆட்சியரிடம் பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் கோரிக்கை மனு

சுரேஷ் பாபு

UPDATED: Sep 16, 2024, 2:10:33 PM

திருவள்ளூர் மாவட்டம்

ரயில் நிலையம் அருகில் உள்ள பெரிய குப்பம் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் குடித்துவிட்டு அரைகுறை ஆடையுடன் திரிகின்ற மக்கள் மத்தியில் நாங்கள் வசிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் நாங்கள் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளோம் 

அதிகமாக மக்கள் கூடுகிற இடத்தில் இதுபோன்ற மதுபான கடைகள் இருப்பதால் எங்கள் வீடுகளில் உள்ள பிள்ளைகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் படிக்கக்கூடிய பிள்ளைகள் மற்றும் பொதுமக்கள் அருகில் குடியிருக்க கூடிய குடியிருப்பு வாசிகள் என அனைவரும் முழுவதுமாக பாதிக்கப்பட்டு வருகிறோம்

டாஸ்மாக்

இதுவரை நான்குக்கு மேற்பட்ட முறையில் நாங்கள் மனுக்கள் கொடுத்து விட்டோம் இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை உடனடியாக மதுபான கடை அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்தில் வைக்க வேண்டும் அப்படி வைத்தால் நாங்கள் நிம்மதியாக வாழ முடியும் 

உடனடியாக மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரிய குப்பம் பொதுமக்கள் மற்றும் 26வது வார்டு கவுன்சிலர் ஜெயலட்சுமி ஆகியோர் ஒன்றிணைந்து வந்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

 

VIDEOS

Recommended