• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே கூலிவேலைக்கு சென்ற பிரதீப் என்ற இளைஞர் HB லைன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி.

உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே கூலிவேலைக்கு சென்ற பிரதீப் என்ற இளைஞர் HB லைன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி.

ராஜா

UPDATED: Sep 27, 2024, 7:26:00 PM

தேனி மாவட்டம்

உத்தமபாளையம் அருகே கோவிந்தன்பட்டி ஆர் சி கிழக்கு தெரு 12 வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் ஆரோக்கியம்மாள் இவர்களின் மகன் பிரதீப் 23 வயது இளைஞர் ஆவார்.

இவர் உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே செந்தில்குமார் என்பவர் புதியதாக வீடு மற்றும் கடைகள் கட்டிட வேலை செய்து வருகிறார் இதற்கு சென்ட்ரிங் கூலி வேலைக்கு சென்றுள்ளார் பிரதீப்.

அப்போது வேலை செய்து கொண்டிருந்தபோது சென்ட்ரிங் வேலைக்கு தேவையான மரப்பலகைகளை மேற்பகுதிக்கு தன்னுடன் பணியாற்றும் பணியாளர்களுடன் மாற்றி வைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்சார வயர் HB மின்சாரம் தாக்கி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Latest Theni District News

தகவல் அறிந்து வந்த உத்தமபாளையம் காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. 

இத்தகவல் அறிந்து இளைஞரின் உறவினர்கள் பெற்றோர்கள் அனைவரும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

தன் மகனை பறிகொடுத்து கதறி அழும் தாய் தந்தையர் மற்றும் உறவினர்களை பார்க்கும்போது காண்போர் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேறக் கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended