• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே போதை ஆசாமி காவல்துறையினருடன் ரகளை - குண்டு கட்டாக தூக்கிய காவல்துறையினர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே போதை ஆசாமி காவல்துறையினருடன் ரகளை - குண்டு கட்டாக தூக்கிய காவல்துறையினர்.

JK

UPDATED: Jul 3, 2024, 8:50:12 AM

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியை சுற்றியும் நான்கு மது கடைகள் உள்ளது. இந்த மது கடைகள் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி அடிதடி பிரச்சினைகளும் எழுந்து வருகிறது.

அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் மதுக்கடையில் மது அருந்திவிட்டு ஒரு இளைஞர் அவ்வழியாக வரும் நபர்களை ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அங்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் மது போதையில் இருந்த இளைஞரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

 மது போதையில் இருந்த இளைஞர் அங்கிருந்து செல்ல மறுத்து காவல்துறையினர் மற்றும் அங்கு சுற்றி நின்றவர்களை தகாத வார்த்தைகளால் கொச்சையாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

உடனடியாக காவல்துறையினர் அந்த இளைஞரை விசாரணைக்காக அழைத்தபோது விசாரணைக்கு வர மறுத்து சாலை நடுவே அமர்ந்து கொண்டு மதுபோதையில் ரகலையில் ஈடுபட்டார்.

இதன் காரணமாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் முக்கிய பேருந்துகள் வரிசையாக நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மது போதையில் இருந்த இளைஞரின் பாக்கெட்டில் மேலும் இரண்டு மது பாட்டில்களும் இருந்தது வலுக்கட்டாயமாக அந்த இளைஞரை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended