குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள்  உள்ளிருப்பு போராட்டம்.

மாரியப்பன்

UPDATED: Jul 23, 2024, 4:09:52 PM

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் 2 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிலுவையில் உள்ள 7 மாத சம்பளத்தை வழங்கவேண்டும் என்பது கௌரவ விரிவுரையாளர்களின் பிரதான கோரிக்கை.

Perambalur News Tamil Today

பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியாக இருந்து அரசு கல்லூரியாக மாற்றம் செய்யும் போது 14 பாடப்பிரிவுகளில் 9 க்கு மட்டுமே அரசு அரசாணை வழங்கியுள்ளது.

மீதி உள்ள 5 பாடப்பிரிவுகளுக்கு அரசாணை வழங்கவேண்டும்.

ஒவ்வொருமுறையும் நாங்கள் போராடும் போதும் அரசு எங்களை கண்டுகொள்ளவில்லை.

Tamil Latest News

அதனால் இந்த முறை எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை வகுப்புகளையும் அலுவலகப்பணிகளையும் புறக்கணித்து போராடுவோம்.

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம்.இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளர்கள், மணிநேர விரிவுரையாளர்கள், அலுவலகப்பணியாளர்கள் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended