• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பெற்றோர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பெற்றோர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

JK

UPDATED: Sep 24, 2024, 10:00:49 AM

திருச்சி

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமையில் 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் அரசாணை எண் 149 மறு நியமனம் போட்டித் தேர்வு முற்றிலும் நீக்கிட வேண்டும், திமுக தேர்தல் அறிக்கை 177ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும், முறைசாரா பணியாளர்கள் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட 4000 ஆசிரியர்களை குறைந்தபட்சம் தொகுப்பூதியத்தில் பணி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பல்வேறு பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended