நாகையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் 100க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிப்பு.

செ.சீனிவாசன் 

UPDATED: Aug 12, 2024, 8:29:35 AM

நாகப்பட்டினம் மாவட்டம் 

திருக்குவளை தாலுக்கா நத்தப்பள்ளம் ஊராட்சி செம்பியவேளூர் கிராம பாசன வாய்க்காலில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு கிராம மக்கள் ஒன்றிணைந்து பாசன வாய்க்காலில் ஏற்படும் மண்ணரிப்பை தடுத்திடவும் கரையை பலப்படுத்திடவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை கரையோரங்களில் நடவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் தனி நபர்கள் இயந்திரங்கள் கொண்டு வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபடும் போது 100க்கும் மேற்பட்ட பனை மரங்களை அடியோடு பிடுங்கி அகற்றி உள்ளனர்.

பனைமரம்

தமிழகத்தின் மாநில மரமான பனைமரத்தினை அகற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரியிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பனை மரங்களை அகற்றிய நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் பனை விதைகளை நடவு செய்ய வேண்டும் என கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

VIDEOS

Recommended