• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சாம்சங் தொழிற்சங்க பதிவை உடனே செய்ய வேண்டும் என்பதை கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் மறியல்.

சாம்சங் தொழிற்சங்க பதிவை உடனே செய்ய வேண்டும் என்பதை கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் மறியல்.

JK

UPDATED: Oct 1, 2024, 1:36:56 PM

திருச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் சி.ஐ.டி.யூ திருச்சி மாநாகர் மாவட்ட குழு சார்பில் சத்திரம் பேருந்து நிலையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினர் செல்வி ஆகியோர் உரையாற்றினர் 

சிஐடியு

மறியல் போராட்டத்தில் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய சங்கம் கேரும் உரிமையை உறுதிபடுத்த வேண்டும், பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் சட்டவிரோத, ஜனநாயக விரோத நடவடிக்கையை கைவிட வேண்டும், போராட்டத்தை ஒடுக்க காவல்துறையை ஏவுவதை கைவிட வேண்டும்.

தொழிற்சங்க பதிவை உடனே செய்ய வேண்டும். தொழிற் சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

சாம்சங்

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன், சிவக்குமார், சந்திரன், கருணாநிதி, மணிமாறன், எஸ்.கே.செல்வராஜ், சந்திரசேகரன், ஜெயராமன், மருதைராஜ், செல்வராஜ், கணேசன், ராஜ், ராணி, லெனின், ரமேஷ், பிரமிளா உட்பட 100க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 

VIDEOS

Recommended