• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி  கடைகளுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி  கடைகளுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.

JK

UPDATED: Jun 15, 2024, 7:42:11 PM

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டு சுமார் 35 கடைகள் வாடைக்கு விடப்பட்டது. இந்த கடைகளில் 20கடைக்காரர்கள் 3மாதம் முதல் 18 மாதம் வரை வாடகை செலுத்தாமல் உள்ளது.

சுமார் 13லட்சம் முதல் 10லட்சம் வரை வாடை பாக்கி உள்ளது. ஒரு கடைக்காரர் மட்டுமே மூன்று மாதம் மட்டும் வாடகை நிலுவை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த கடைகளுக்கு அதிகாரிகள் உரிய நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை வாடகை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை பொறியாளர்கள் மதன்குமார், ராஜேந்திரன், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்ட உதவி அலுவலர் குமரேஷ் ஆகியோர் கடைக்குச் சென்று கடைகளை பூட்டு போட்ட போட்டனர்.

மேலும் அப்பதில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள கடைகளையும் அகற்றினர். பாதுகாப்பு பணியில் திருச்சி கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

VIDEOS

Recommended