மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி வடமாநில வாலிபர் பலி.

S.முருகன்

UPDATED: Aug 28, 2024, 7:27:43 PM

Latest District News in Tamil 

கொல்கத்தா மாநிலத்தை சைபுதீன் அகமது(18), பூந்தமல்லி அடுத்த கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள இறைச்சி கடையில் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று மாலை மொபெட்டில் மாங்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். 

குமணன்சாவடி - குன்றத்தூர் செல்லும் சாலை குமணன்சாவடி அருகே சாலையின் எதிர் திசையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மொபெட் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் சைபுதீன் அகமது காயம் அடைந்தார்.

Breaking News

இதையடுத்து அவரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சைபுதீன் அகமது இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன சைபுதீன் அகமது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

News

விசாரணையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சைபுதீன் அகமதுவிற்கு திருமணம் நடந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கு கடைக்கு வேலைக்கு வந்ததாகவும் மோட்டார் சைக்கிள்கள் மோதி கீழே விழுந்த சைபுதீன் அகமது மீது இருசக்கர வாகனம் ஏறி இறங்கியதில் இறந்து போனது முதல் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended