• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மதம் மாற்றம் தொடர்பாக திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ சோதனை.

மதம் மாற்றம் தொடர்பாக திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ சோதனை.

ரமேஷ்

UPDATED: Aug 1, 2024, 7:25:32 PM

கும்பகோணம் 

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா மதம் மாற்றம் தொடர்பாக திருபுவனத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் என்.ஐ.ஏ இதுவரை 13 நபர்களை கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் 5 நபர்கள் தேடப்படும் குற்றவாளியாக என்.ஐ.ஏ அறிவித்தது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அமைப்பினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Latest Kumbakonam District News 

அந்த வகையில் கும்பகோணத்தில் உள்ள கருப்பூர் பைசல், மேலக்காவிரி கே.எம்.எஸ்.நகர் யூசுப், திருபுவனம் இஸ்மாயில் மகன் யூசுப்கான், திருமங்கலக்குடி அன்வர் பாட்ஷா மகன் இம்தியாஸ், அய்யூப்கான் மகன் ஹாலித், ஹனீபா மகன் முகமது ஹாலித் உள்ளிட்டோரின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

News

மேலும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் குறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் கும்பகோணத்தில் 2 இடங்களில், திருவிடைமருதூர் பகுதியில் திருபுவனத்தில், திருமங்கலகுடியில் 2 இடம் என 5 இடங்களில் 6 பிரிவுகளாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended