• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மத்திய அரசின் சிறந்த ஊராட்சி மன்ற தலைவர் விருது வாங்கிய திருக்கண்ணங்குடி ஊராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டு விழா.

மத்திய அரசின் சிறந்த ஊராட்சி மன்ற தலைவர் விருது வாங்கிய திருக்கண்ணங்குடி ஊராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டு விழா.

செ.சீனிவாசன் 

UPDATED: Aug 29, 2024, 5:01:15 AM

நாகப்பட்டினம் மாவட்டம்

கீழ்வேளூர் ஒன்றியம் திருக்கண்ணங்குடி ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான தேசிய விருது மற்றும் சான்றிதழ் மத்திய அரசு வழங்கியது.

Breaking News

அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் மூலம் சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருது பெற்ற திருக்கண்ணங்குடி செல்வமணிக்கு கீழ்வேளூர் லயன் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது இதில் அவருக்கு சேவை செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Latest District News 

இதில் தலைவர் ஏ.ராவணன், செயலாளர் ஆர். தரணி, பொருளாளர் பாக்யராஜ், வட்டார தலைவர் பி.பிரசண்ணா, மண்டல ஒருங்கிணைப்பாளர் பி. ரஞ்சித், வணிகர் சங்கத் தலைவர் ஈ. செல்வகுமார், மற்றும் லயன்ஸ் சங்க இயக்குநர்கள் , உறுப்பனர்கள் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended