• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • வேதாரண்யம் அருகே அரசு தானியக்கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்.

வேதாரண்யம் அருகே அரசு தானியக்கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்.

செ.சீனிவாசன் 

UPDATED: Jul 6, 2024, 1:24:19 PM

Latest Nagapattinam District News

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோவில்பத்து ஊராட்சியில் ஆசிய கண்டத்திலேயே இரண்டாம் இடம் வகிக்கும் தானியக்கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் ஈடுபட்டு வருகின்றனர் 

கடந்த இரண்டாம் தேதியுடன் ஒப்பந்தம் முடிந்துள்ளதால் தற்பொழுது ஒப்பந்தம் எடுக்காததால் கடந்த நான்கு தினங்களாக சம்பளம் வழங்கவில்லை

Nagapattinam News & Live Updates 

மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தானிய கிடங்கிற்குள் எந்த விதமான அடிப்படை வசதிகள் இல்லாததால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் தானியக்கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகையால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் நூற்றுக்கு மேற்பட்ட லாரிகள் குடோனில் காத்து கிடக்கின்றன.

அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஒப்பந்த தொழிலாளர்கள் லோடு ஏற்றாமல் தற்போது காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended