• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • விருகம்பாக்கத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கட்சி கொடி கம்பங்கள் அடியோடு அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்.

விருகம்பாக்கத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கட்சி கொடி கம்பங்கள் அடியோடு அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்.

ஆனந்த்

UPDATED: Aug 20, 2024, 2:13:16 PM

சென்னை

விருகம்பாக்கம் ஆற்காடு சாலை பெருமாள் கோயில் தெரு பகுதியில் கட்சி கொடி கம்பங்கள போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக பொதுமக்களிடம் இருந்த புகார் வந்த நிலையில்

இன்று சென்னை மாநகராட்சி மண்டலம்- 10 ல் அரசு அதிகாரிகள் சார்பில் இந்த பகுதியில் நிறுவப்பட்டிருந்த திமுக ,புரட்சி பாரதம், விசிக உள்ளிட்ட கட்சாகளின் கொடி கம்பங்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அரசு அதிகாரிகளால் ஊழியர்களை வைத்து அதிரடியாக இன்று அடியோடு அகற்றப்பட்டது.

கட்சி கொடி

விருகம்பாக்கம் காவல்துறையினரிடம் அனுமதி பெற்று இந்த கொடி கம்பங்கள் அகற்றப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

கட்சி கொடி கம்பங்கள் அகற்றம் என்பதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க விருகம்பாக்கம் போலீசார் இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக - புரட்சி பாரதம் - விசிக

VIDEOS

Recommended