• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • குன்றத்தூரில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி.

குன்றத்தூரில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி.

S.முருகன்

UPDATED: Sep 6, 2024, 7:57:22 PM

குன்றத்தூர்

சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரை இணைக்கும் முக்கிய பகுதியாக விளங்குவது குன்றத்தூர் தினம்தோறும் இந்த சாலையை பயன்படுத்தி ஏராளமான வாகனங்கள் சென்னைக்கும் சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கும் சென்று வருகின்றன

இந்நிலையில் குன்றத்தூர் நான்கு சாலையிலிருந்து குன்றத்தூர் பஸ் நிலையம் செல்லும் சாலை வரை காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பாக நான்கு சாலை வழியை மையப்படுத்தி தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை இனைக்கும் சாலையாக உள்ள இந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன

Breaking News In Tamil

இதனால் வேலைக்கு செல்பவர்களும் பள்ளி கல்லூரிக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் 

இந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாதது இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் எனவும் இதனை அறிந்த அந்த பகுதி ஆட்டோ டிரைவர்கள் மற்றும் வாலிபர்கள் சிலர் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Latest Chennai news

இருப்பினும் வாகன ஓட்டிகள் அவர்களை மதிக்காமல் வாகனங்களை குறுக்கும் நெடுக்குமாக எடுத்துச் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது 

இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்து வருவதால் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அனிவகுத்து நிற்கிறது

 

VIDEOS

Recommended