• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • அரசு மகப்பேறு மருத்துவமனையில் மின்சார வாரியத்தின் அலட்சியத்தினால்  தாய் சேய் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் பெரும் அவதி.

அரசு மகப்பேறு மருத்துவமனையில் மின்சார வாரியத்தின் அலட்சியத்தினால்  தாய் சேய் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் பெரும் அவதி.

அந்தோணி ராஜ்

UPDATED: Aug 23, 2024, 10:41:07 AM

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்திசிலை. அருகே அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்று மணி நேரங்களுக்கு மேல் மின்வெட்டு நீடித்த நிலையில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொண்டு வர முயற்சித்தும் பலன் அளிக்காததால் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை இருளில் மூழ்கியது.

அரசு மருத்துவமனை

இதன் காரணமாக மகப்பேறுற்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாய்மார்கள் பிரசவித்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் மின்சாரம் இன்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மூன்று மணி நேரம் கழித்து அரசு மருத்துவமனைக்கு வந்த மின்வாரியத் துறை ஊழியர்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது சரி செய்து மீண்டும் மின்சாரம் வழங்கினர்.

TNEB

மேலும் தொடர்ந்து கூடுதலாக இரண்டு மணி நேரம் மின்வெட்டு நீடித்திருந்தால் அவசர கால சிகிச்சைக்காக ரத்த வங்கியில் வைக்கப்பட்டிருந்த ரத்த பாக்கெட்டுகள் கெட்டு வீணாகும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என செவிலியர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் கவலை தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended