• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கடம்பத்தூரில் ரயில்வே ஊழியரை வெட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

கடம்பத்தூரில் ரயில்வே ஊழியரை வெட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

சுரேஷ் பாபு

UPDATED: Jun 14, 2024, 6:27:33 PM

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த கசவாநல்லூர் ராமகிருஷ்ணன்- சித்ரா தம்பதியினரின் மகன் தினேஷ்குமார் ரயில்வேயில் பணி செய்து வரும் இவர் ,

கசவநல்லாத்தூர் பகுதியில் தங்கி இருந்துள்ளார், 

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கமலேஷ் என்ற இளைஞருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது,

இந்நிலையில் நேற்று மாலை கமலேஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் நான்கு பேர் தினேஷ் சை சரமாரியாக வெட்டி தப்பி சென்றுள்ளனர்,

இந்நிலையில் வெட்டுப்பட்டு தினேஷ் கவலைக்கிடமாக இருந்த நிலையில் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  

காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்காமல், நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளுக்கு சாதகமாக இருப்பதாக கூறி தினேஷ் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளைஞர்கள் என ஏராளமானோர் திருவள்ளூர் காஞ்சிபுரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்,  

இதனால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் திருவள்ளூர் டிஎஸ்பி அழகேசன், ஆய்வாளர்கள் ரவிக்குமார் அந்தோணி ஸ்டாலின் மற்றும் காவலர்கள் ஏராளமான பேச்சு வார்த்தை ஈடுபட்டு வருகின்றனர்.



VIDEOS

Recommended