• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற மாதாந்திர மின்கட்டண முறையை அமல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற மாதாந்திர மின்கட்டண முறையை அமல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்.

ரமேஷ்

UPDATED: Jul 25, 2024, 2:11:16 PM

கும்பகோணம்

கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும்!

மாதாந்திர மின்கட்டண முறையை அமல்படுத்த வலியுறுத்தியும்!  உதை மின் திட்டம் என்று சொல்லி மாநில அரசுகளை மின்கட்டணத்தை உயர்த்த சொல்லி நிர்பந்திக்கும் மோடி அரசின் அராஜக போக்கை கண்டித்தும்! கண்டன ஆர்ப்பாட்டம் கடலங்குடி தெருவில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு மாநகர செயலாளர் செந்தில்குமார், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு மனோகரன், மாவட்ட குழு ஜீவபாரதி, மாமன்ற உறுப்பினர் செல்வம், மாவட்டத் தலைவர் கண்ணன், மாநகர குழுக்கள் பார்த்தசாரதி, மணி, நாகராஜன், அன்புமணி, ரஞ்சித் குமார், சுமதி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மின் கட்டணம் ரத்து செய்ய கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

 

VIDEOS

Recommended