மாங்காடு நகராட்சி நகர மன்ற கூட்டம் அடிப்படை வசதிகள் குறித்து காரசார விவாதம்.

ஆனந்த்

UPDATED: Aug 25, 2024, 8:03:29 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

மாங்காடு நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் சுமதி முருகன் தலைமையில் துணைத் தலைவர் பட்டூர் ஜபருல்லா முன்னிலையில் நடைபெற்றது 

இதில் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் நிலவும் அவல நிலையை மாங்காடு நகராட்சி மன்ற கூட்டத்தில் விவாதித்தார்கள் முக்கியமாக குடிநீர் சாலை வசதி மருத்துவ வசதி கல்வி வசதி தெரு நாய் பிரச்சனைகள் மழைக்காலங்களில் மழை நீர் தேங்குதல் இதனால் குடியிருப்பு வாசிகள் அவதி நிலைக்கு ஆளாகிறார்கள் என்றும் கழிவு நீர் பிரச்சனைகள் இதனை மையமாக வைத்து விவாதிக்கப்பட்டது

உடன்பாடு எட்டும் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என நகர மன்ற தலைவரும் நகராட்சி ஆணையாளர் லதா உறுதியளித்தனர் உடன்பாடு எட்டாத பிரச்சனைகளுக்கு நகர மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் சிறிது நேரம் காரசார விவாதம் ஏற்பட்டது.

இதில் நகர மன்ற உறுப்பினர்கள் திமுக அதிமுக மனிதநேய மக்கள் கட்சி, புரட்சி பாரதம் ,விடுதலை சிறுத்தை ,மனிதநேய மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended