• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கொலை மிரட்டல் விடுத்த வீடியோவை வெளியிட்ட சிறார்களுக்கு அட்வைஸ் செய்த திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர்.

கொலை மிரட்டல் விடுத்த வீடியோவை வெளியிட்ட சிறார்களுக்கு அட்வைஸ் செய்த திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர்.

JK

UPDATED: Jun 13, 2024, 11:24:57 AM

கடந்த வாரம் இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில், "கொம்பன் ஜெகன் டீம் (Komban_jegan_team)" என்ற முகவரியில் இருந்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், புகைப்படத்தை பகிர்ந்து, அத்துடன் "விரைவில் தலைகள் சிதறும்" என "Komban Brothers" என்ற பதிவை பகிர்ந்து பொதுமக்கள் மத்தியில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், கலவரங்களை தூண்டும் விதத்திலும் இன்ஸ்டா ஸ்டோரி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், மேற்படி இன்ஸ்டா ஸ்டோரி பதிவேற்றம் செய்தது 16வயது சிறுவன் என தெரியவந்தது. 

இதன் அடிப்படையில், மேற்படி சிறுவன் மீது, வாத்தலை காவல் நிலைய வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி நபரை அழைத்து விசாரணை செய்தபோது, மேலும் 17வயது சிறுவன் மற்றும் 18வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கும் இதில் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

மேற்படி மூவரும் இளஞ்சிறார்கள் என்பதால், சமூக வலைத்தளங்களில் அச்சுறுத்தும் வகையில் பதிவிடாமல், கவனமாக கையாள வேண்டுமென கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டனர். மேலும், இதில் சம்மந்தப்பட்ட 17வயதுடைய நபரை தேடிவருகின்றனர்.

இதுபோன்ற பொதுமக்கள் மத்தியில் கலவரம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மூன்று சிறார்கள் பெற்றோர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் அழைத்து அறிவுரை வழங்கினார். முன்னதாக மூன்று சிறார்கள் வழக்கு பதிவு செய்து அறிவுரையுடன் எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் நேரடியாக இந்த செயலில் ஈடுபட்ட சிறார்களிடம் :

இந்த தலைமுறையில் எத்தனையோ பேர் டாக்டர், இன்ஜினியர் என்று தங்களது வாழ்வை மிக சரியான பாதையில் எடுத்து செல்கின்றனர். உலகம் மிகவும் பெரியது உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபட வேண்டாம். ரீல்ஸ் பார்ப்பதில் தவறில்லை நல்லதை பாருங்கள் நல்லதை பகிருங்கள் என காவல்துறை கண்காணிப்பாளர்  வருண்குமார் அறிவுரை செய்து அனுப்பி வைத்தது கவனத்தை ஈர்த்ததுள்ளது.

 

VIDEOS

Recommended