சாயல்குடி பகுதியில் தொடர் மின்வெட்டு பொதுமக்கள் அவதி.

கார்மேகம்

UPDATED: Jun 24, 2024, 9:13:52 AM

சாயல்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக ஒரு மணி நேரத்திற்கு 10 முறைக்கு மேல் மின்சாரம் தடைபட்டு வருகிறது

இதனால் வீட்டிலுள்ள மின்சார பொருட்கள் வியாபாரிகள் உபயோகிக்கும் மின்சாதன பொருட்கள் பழுது ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது அதனால் சாயல்குடி பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

இது குறித்து சாயல்குடி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூறுகையில் சாயல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 தினங்களாக ஒரு மணி நேரத்தில் 10 முறைக்கு மேல் மின்சாரம் தடைபட்டு வருகிறது 

 

இப்பகுதியில் வணிகம் சார்ந்த கடைகள் அதிகமாக உள்ளன அடிக்கடி மின்சாரம் தடைபட்டு வருவதால் மின்சாதன பொருட்கள் பழுது ஏற்படும் அபாயத்தில் உள்ளது

மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தாலும் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதால் பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் 

எனவே சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளுக்கு முறையாக மின்சாரம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended