கார்கில் போர் 25ஆம் ஆண்டு வெற்றி விழா.

JK

UPDATED: Jul 26, 2024, 11:09:20 AM

திருச்சி 

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிருக்கும் இடையே 1999 ஆம் ஆண்டு கார்கில் என்கிற இடத்தில் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது.

இதில் இந்திய நாட்டிற்காக ஏராளமான ராணுவ வீரர்கள் தங்களுடைய உயிரை தியாகம் செய்தனர்.

அதில் ராணுவத்தில் மேஜராக பணியாற்றிய திருச்சியை சேர்ந்த சரவணன் 4 எதிரிகளை நேரடியாக எதிர் கொண்டு அவர்களை வீழ்த்தி முகாம்களை தரைமட்டம் செய்து போரில் வெற்றிக்கு வித்திட்டு முதல் ராணுவ அதிகாரி மேஜர் சரவணன் வீர மரணம் அடைந்தார். 

கார்கில் போர்

இந்த கார்கில் போரின் 25ஆம் ஆண்டு வெற்றி தினமான இன்று கொண்டாடப்படுகிறது. 

அதனை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள மேஜர் சரவணனின் நினைவு ஸ்தூபிக்கு என்.சி.சி குரூப் கமாண்டர் கர்னல்.விஜயகுமார், நிர்வாக கமாண்டிங் கர்ணல். ஷாம் சாரதி, 2 தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டிங் ஆபிஸர் கர்ணல் .அருண்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அருள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

Latest Trichy District News

இதனைத் தொடர்ந்து தேசிய மாணவர் படையினர் மற்றும் பொதுமக்கள் என்சிசி மாணவர்கள் என பலர் கலந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

 

VIDEOS

Recommended