தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது.

ஜெயராமன்

UPDATED: May 18, 2024, 11:25:49 AM

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மளிகை கடையில் விற்பனை செய்த - காரியாங்குடி, மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மோகன் (வயது-50) என்பவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ் - 175 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபரை கைது செய்த திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய உதவி ஆய்வாளர் .பாரதநேரு, பயிற்சி உதவி ஆய்வாளர் .வீரராகவன், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர் வெங்கடேசன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார், பாராட்டினார்கள்.

பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் கடுமையாக எச்சரித்துள்ளார்.

 

VIDEOS

Recommended