• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • உணவு கிடங்கு ஊழியருக்கு இளநீர் ஊட்டி குடிக்க வைத்த தமிழக கூட்டுறவு துறை செயலளர் ராதக்கிருஷ்ணண்.

உணவு கிடங்கு ஊழியருக்கு இளநீர் ஊட்டி குடிக்க வைத்த தமிழக கூட்டுறவு துறை செயலளர் ராதக்கிருஷ்ணண்.

சுந்தர்

UPDATED: Aug 6, 2024, 12:15:53 PM

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை

உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக குடோனில் தமிழ்நாடு கூட்டுறவு துறை இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார் .

திருமழிசையில் உள்ள தமிழ்நாடு அரசின்வாணிபக் கழக குடோனில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சண்முகவள்ளி மாவட்ட மண்டல மேலாளர் நுகர் பொருள் வாணிப கழகம் கௌசல்யா மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் துவரம் பருப்பு அரிசி சர்க்கரை உள்ளிட்டவைகளின் அளவு தரம் குறித்து தமிழ்நாடு கூட்டுறவு செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது குடோனில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு குடிக்க இளநீர் கொடுத்தார் அதனை மறுத்த ராதாகிருஷ்ணன் ஊழியர்கள் தான் குடிக்க வேண்டும் உழைப்பவர்கள் நீங்கள்தான் என அந்த இளநீரை சகாதேவன் ஊழியருக்கு வாயில் ஊட்டி குடிக்க வைத்து அழகு பார்த்தது செயல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் நெகிழ்ச்சியைய் ஏற்படுத்தியது.

 

VIDEOS

Recommended