வெயில் தாங்க முடியாமல் மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு.

சுரேஷ் பாபு

UPDATED: Jul 17, 2024, 6:26:44 PM

Latest Thiruvallur District News

திருவள்ளூர் அடுத்த பேராத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தனது கிராமத்தில் சிறிய மளிகை கடை ஒன்று நடத்தி வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை ஈட்டி வந்துள்ளார் 

இந்த நிலையில் வழக்கம்போல் தனது கிராமமான பேராத்தூர் பகுதியில் இருந்து திருவள்ளூரில் உள்ள மார்க்கெட்டுக்கு பொருட்களை வாங்கிக் கொண்டு பேருந்து நிலையம் செல்லும் போது வெயில் தாங்க முடியாமல் மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

News

இது குறித்தான கண்காணிப்பு கேமரா பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த கண்காணிப்பு கேமரா பதிவில் மூதாட்டி தலையில் சுமார் 20 கிலோ அளவிலான பொருட்களை சுமந்து கொண்டு கையிலும் முட்டை உள்ளிட்ட மளிகை பொருட்களை எடுத்து வந்து கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் வருவதை உணர்ந்த மூதாட்டி கையில் இருந்த முட்டையை கீழே வைத்து விட்டு அமர நினைக்கும் போது தடுமாறி சுருண்டு விழுந்த காட்சிகளும் பதிவாகியுள்ள நிலையில்,

அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொடுத்த நிலையிலும் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் வெளியாகி தற்பொழுது அதிர்ச்சியும் பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended