அரசு மருத்துவர் தற்கொலை மருத்துவமனை மட்டுமல்ல அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.

ராஜா

UPDATED: Jul 5, 2024, 12:14:06 PM

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தோல் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருபவர் மருத்துவர் மணிமாலா அவர்கள் இவர் கணவருடன் சின்னமனூர் பகுதியில் சிவசக்தி நகரில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். 

இன்று அதிகாலை 03 மணி அளவில் மருத்துவரான மணிமாலா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து மனைவியின் உடலை கணவரே மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

கணவர் சின்னமனூர் பகுதியில் காந்தி சிலை அருகே ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

எதற்காக அரசு மருத்துவர் மணிமாலா அவர்கள் தற்கொலை செய்து கொண்டார் ஏதேனும் குடும்ப பிரச்சனையா அல்லது மருத்துவமனையில் பிரச்சனையா என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் இது தற்கொலையா ? என சின்னமனூர் காவல்துறையினர்  தகவல் அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு சென்று அரசு மருத்துவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சின்னமனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended