• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பேரூராட்சி அலுவலகத்திற்குள் பேரூராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்த பொதுமக்கள்.

பேரூராட்சி அலுவலகத்திற்குள் பேரூராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்த பொதுமக்கள்.

ராஜா

UPDATED: Sep 3, 2024, 6:13:58 PM

தேனி மாவட்டம் கம்பம் 

அருகே உள்ள காமயகவுணடன்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. 

இதில் குறிப்பாக 8-வது, 9 -வது வார்டில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிப்பிட வசதி என்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்குள் இருந்த பேரூராட்சி மன்ற தலைவர் வேல்முருகனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Latest Theni District News 

சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்ற இந்த வாக்குவாதத்தில் அதிகாரிகள் வருகை தந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை செய்த பின் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இன்று காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் நேரத்தில் இவ்வாறு ஒரு பிரச்சனை நடைபெற்றது அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Breaking News 

VIDEOS

RELATED NEWS

Recommended